• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரேசில் நாட்டு ரசிகர்களுக்கு போட்டிகளை பார்க்க அரசு சலுகை

June 12, 2018 tamilsamyam.com

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நேரலையில் பார்க்க பிரேசில் நாட்டு ரசிகர்களுக்கு வேலைக்கு வருதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆர்வம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசிக்க வேண்டும் என்பதே.உலகளவில் பலரும் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்து ரஷ்யாவுக்கு பறக்க தயாராக உள்ளனர்.

அப்படி வசதியும்,வாய்ப்பும் இல்லாதவர்கள் போட்டியை நேரில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஷ்ய நேரப்படி மாலை 5.30, 8.30, 11.30 ஆகிய நேரங்களில் போட்டி நடைப்பெறுகிறது.

உலகின் பல்வேறு இடங்களில் ரஷ்ய நேரப்படி போட்டிகள் நள்ளிரவில் நடைப்பெற்றாலும் அதை கண்டே தீர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் நள்ளிரவாகவும், மேற்கு பகுதியில் உள்ள ஐரோப்பா நாடுகளில் மதியம் மற்றும், அமெரிக்க நாடுகளில் அதிகாலை நேரத்தில் போட்டி நடைப்பெறும் நேரமாக இருக்கும்.

இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் மிக தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் பிரேசில் நாட்டவர். இவர்களுக்கு பிரேசில் அணி விளையாடும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஏதுவாக வேலை நேரம் மாற்றிக்கொள்ளலாம் என பிரேசில் அரசு அறிவித்துள்ளது.இதனால் பிரேசில் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க