• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணியில் இடம் பிடித்த சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் !

June 7, 2018 தண்டோரா குழு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.தற்போது ஓய்வு பெற்றுள்ள ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன் இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி,இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 நாட்கள் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில்,இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார்.உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எனினும் தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் படிக்க