• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் இயற்கை அழகை ஏர் பலூன் முலம் ரசிக்கும் பயணிகள்

May 26, 2018 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி இயற்கையை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பச்சை பசைனு மரங்கள் சுத்தமான காற்று வீசும் சூழல் பகுதிகளை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல வண்ணங்கள் கொண்ட ராட்சத பலூன் விளையாட்டு நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஏர் பலூனில் இருந்தபடி பயணிகள் வானில் பறந்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் குளிர் பருவத்தில் சாகச விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக அந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரிசார்ட் மைதானத்தில் ஏர் பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பயணிகள் ஏர் பலூனில் பயணித்தபடி சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கின்றனர். இந்த சாசக விளையாட்டு இந்திய விமானப்படையின் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் அத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க