• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

May 21, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட பல மடங்கிற்கு மேல் கட்டணத்தை வசூலிப்பதாகவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரி, மானவர்கின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும் கல்வி கட்டணத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுவதாகவும் எனவே மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் , தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டண பட்டியலை பள்ளியின் முகப்பில் பெற்றோர் மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டும் இதுநாள் வரை தனியார் பள்ளிகள் அதனை கடைபிடிப்பதில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க