• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள கேரள முதல்வருக்கு கமல் அழைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சி துவங்கும் , முன்பே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த கமல் கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் கமலஹாசன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்,

ஜூன் மாதத்தில் கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்போவதாகவும் அதில் கலந்துகொள்ள பினராயி விஜயனை அழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்புக்கு பிறகு பினராயி விஜயன் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் எ.சி. மொய்தீன் ஆகியோருடன் கமல்ஹாசன் ஒன்றாக மதிய உணவருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க