• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு கருவிகள் இல்லை பக்கெட் தண்ணீர் உண்டு – பொதுமக்கள் புகார்

May 21, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், சிலர் தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கருவிகளை வைக்காமல் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் வைத்தாக குற்றம்சாட்டிள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது சில நேரங்களில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்திலேயே பொதுமக்கள் சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் தீ தடுப்பு கருவிகளை வைக்காமல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வாளி மற்றும் குடத்தில் தண்ணீரை வைத்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான வகையில் எடுப்பதில்லை என புகார் எழுந்து உள்ளது.

இந்தகுறைந்த அளவிலான தண்ணீரை வைத்து எந்த வித தீயையும் விரைவில் கட்டுப்படுத்த முடியாது என்பதால் முன்னெச்சரிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க