• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான விபத்தில் பயணிகளைக் காப்பாற்றிய வீரர் மரணம்

August 4, 2016 தண்டோரா குழு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் நேற்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 282 பேரும் விரைவாக வெளியேற்றப் பட்டதால் உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. சுமார் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் அதில் பயணித்துள்ளனர்.

துபாயில் தரை இறங்கிய விமானம் சிறிது தூரம் சென்றதும் பைலட் கட்டுப்பாட்டை இழந்ததால் படுவேகமாக ஓடியுள்ளது. சில தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகளை அவசரமாக வெளியேற்றி உள்ளனர். ஆனால் அதற்குள் விமானத்தின் இன்ஜின் திடீர் என வெடித்தது.

இதையடுத்து விமானம் தீ பிடித்து ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர். உடனடியாக அவர்கள் தீயை அணைத்ததோடு மீட்புப் பணியில் ஈடுபட்டு 282 பயணிகளையும் காப்பாற்றினர்.

இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவைச் சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரிழந்தார். பிறரைக் காப்பாற்றுவதற்காக உயிரைத் தியாகம் செய்த முகமது ஹசன் போற்றத்தக்கவர் என்று, துபாய் சிவில் விமானத்துறை தெரிவித்துள்ளது

மேலும் படிக்க