• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வந்தாச்சு பெண்களுக்கான ஐபிஎல்!-பிசிசிஐ

May 18, 2018 tamilsamayam.com

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட முதல் இன்று வரை மிக கோலாகலமான வரவேற்பு நீடிக்கிறது.

11வது சீசன் நடந்து வரும் நிலையில் தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண் வீரர்களைப் போல,பெண் வீராங்கனைகளை வைத்து ஐபிஎல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் தொடக்க நிகழ்வாக மும்பையில் நடக்கும் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று போட்டிக்கு முன்பாக அதே மைதானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி நடத்தப்பட உள்ளது.

ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ்,ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என இரண்டு பெண்கள் அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,இங்கிலாந்தை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு அணியிலும் தலா 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் அணியும் விளையாட உள்ளன.

இது பெண்கள் ஐபிஎல் போட்டிக்கு தொடக்கமாகவும், அடுத்தாண்டு ஆண்கள் ஐபிஎல் போட்டி போல, பெண்கள் ஐபிஎல் போட்டி நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க