• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் விவசாய கடன் தள்ளுபடி – முதலமைச்சர் எடியூரப்பா

May 17, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பா.

கர்நாடகாவில் சட்டபேரவை தேர்தலில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும்,மஜத 38 இடங்களை கைப்பற்றியது.இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பமான சூழல் இருந்தது.இதற்கிடையில்,காங்கிரஸ்– மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.அதைப்போல் பாஜகவும் உரிமை கோரியது.

இதனால் ஆளுநர் ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு விடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில்,பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவிற்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார்.இதையடுத்து,லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக இன்று காலை பதவி ஏற்றார்.

கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடியூரப்பா விவசாயிகளின் நலன் கருதி ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.

மேலும் படிக்க