• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்வில் தோல்விடைந்த மகனை ட்ரம்ஸ் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற பெற்றோர்

May 16, 2018 தண்டோரா குழு

மத்திய பிரதேசத்தில்,பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவனை அவரது பெற்றோர்கள் ஊர்வலமாக அழைத்து சென்று கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில்,10ம் வகுப்பில் 34% பேரும்,12ம் வகுப்பில் 32% பேரும் தோல்வியடைந்தனர். இதனால் மனமுடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில் தங்களது மகன் 4 பாடங்களில் தோல்வியடைந்ததை அறிந்த ஒரு மாணவனின் பெற்றோர்கள் அவர் வாழ்வில் துவண்டு விடக்கூடாது என்பதற்காக, தோல்வியையும் கொண்டாடும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி, அந்த மாணவனை ட்ரம்ஸ் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்று,அவருக்கு பூங்கொத்துகளை கொடுத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.இந்த செயலை பார்த்த அக்கம்பக்கத்தினர் குழப்பமடைந்தனர்.

இது குறித்து அந்த மாணவனின் தந்தை கூறும்போது,

சிறிய வயதில் அவன் சந்திக்கும் இந்த தோல்வி அவனது மன உறுதியை சிதைத்து விடக்கூடாது. இது அவனது கடைசி தேர்வல்ல என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகஇவ்வாறு செய்தோம். “வாழ்வின் அனைத்து படிநிலைகளையும் நேர்மறையாக அணுகும் வகையில் கற்று கொள்ள வேண்டும் என்பதை எங்களது மகன் உணர வேண்டும் எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க