• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வால்பாறை அருகே பெண்ணை தாக்கிய சிறுத்தை

May 15, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் பெண்ணை சிறுத்தை தாக்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சத்துணவு மையத்தில் வேலை செய்து வருபவர் மகாலட்சுமி(36).இவர் இன்று காலை சுமார் 7.45 மணியளவில் அவரது வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டு இருந்து உள்ளார்.அப்போது,தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அந்த பெண்ணை தாக்கியது.

இதனையடுத்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதில் சிறுத்தை மகாலட்சுமியை விட்டு ஓடியது.படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த மகாலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு கை கால் தொடையில் பலத்த காயங்கள் இருந்தன.இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க