• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளித்த முன்னாள் மாணவர்கள் !

May 14, 2018 தண்டோரா குழு

வேதாரண்யம் அருகே பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர் பாராட்டு விழா நடத்தி ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஆயக்காரன்குளம் கிராமத்தில் இரா. நடேசனார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 45 வருடங்களாக பணியாற்றி வந்த ஆசிரியர் ஆனந்த ராஜ். இவர் கடந்த வாரம் ஓய்வுப்பெற்றார். ஆனந்த் ராஜ் ஓய்வு பெரும் தகவலறிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு சிறந்த பரிசளித்து பாராட்டு விழா நடத்த வேண்டும் விரும்பினர். இதையடுத்து, பணம் வசூலிக்க வேண்டும் என்பதால் மாணவர்கள் வாட்ஸ் ஆப்பில் “ஆனந்த் ராஜ் மாணவர்கள் அமைப்பு” என்ற பெயரில் ஒரு குரூப்பை உருவாக்கி அதில் முன்னாள் மாணவர்களை சேர்த்தனர்.

இவரிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி படித்த மாணவர்கள் விரும்பி நன்கொடை வழங்கினர். பின்னர் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஆசிரியர் ஆனந்த் ராஜிற்கு பாராட்டு விழா நடத்தினர். அவ்விழாவில், முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பிலான மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் மற்றும் தங்கச்செயின் மோதிரம் ஆகியவற்றை அன்பு பரிசாக வழங்கினர்.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில்,

ஆசிரியர் ஆனந்த ராஜ் அவரிடம் கல்வி பயின்றதால் தான் இந்த சமூகத்தில் நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். அவரால் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல மாணவர்கள் உருவாக்கியுள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் எங்களுக்கு புரியும் வகையில் பாடம் எடுப்பார், இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க