May 8, 2018
தண்டோரா குழு
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவிற்கு தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றனர்.இதனையடுத்து தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் சிரமத்தை சந்தித்துவிட கூடாது என உரிய ஏற்பாடுகளை செய்ய காவல்துறை அதிகாரிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,மாணவர்களுக்கு உதவும் வகையில் கேரளா அரசு சார்பில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் உதவி மையங்களை அமைத்து உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது, நீட் தேர்வு சிறப்பாக எழுதிய தமிழக மாணவர்கள் கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நன்றி தெரிவித்துக் வருகின்றனர்.மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாகவும்,சமூக வளைதளங்களிலும் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.