• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு

May 8, 2018 தண்டோரா குழு

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவிற்கு தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்றனர்.இதனையடுத்து தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் சிரமத்தை சந்தித்துவிட கூடாது என உரிய ஏற்பாடுகளை செய்ய காவல்துறை அதிகாரிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,மாணவர்களுக்கு உதவும் வகையில் கேரளா அரசு சார்பில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் உதவி மையங்களை அமைத்து உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது, நீட் தேர்வு சிறப்பாக எழுதிய தமிழக மாணவர்கள் கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நன்றி தெரிவித்துக் வருகின்றனர்.மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாகவும்,சமூக வளைதளங்களிலும் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க