• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடைசி ஓவரில் சென்னை அணி அசத்தல் வெற்றி

April 26, 2018 தண்டோரா குழு

பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்.போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

சென்னை,பெங்களூரு இடையேயான ஐ.பி.எல்.போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.இதனைத் தொடா்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரா் குயின்டன் டீ காக் மற்றும் டிவில்லியா்ஸ் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவா் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரா் வாட்சன் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டே சென்றன.ஆனால் மறு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 8 சிக்சா்கள் உட்பட 82 ரன்கள் குவித்தார்.தொடா்ந்து அதிரடி காட்டிய கேப்டன் தோனி 7 சிக்சா்கள் உட்பட 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இறுதியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க