• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு நீலிவனேஸ்வரர் திருக்கோவில்

April 24, 2018 findmytemple.com

சுவாமி: நீலிவனேஸ்வரர், நீல கண்டேஸ்வரர், வாழைவனநாதர், சுவேத கிரி.

அம்பாள்: விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி.

மூர்த்தி: எமன்.

தலவிருட்சம்: ஞீலி மரம் (கல் வாழை).

தலச்சிறப்பு:

“ஆதிதிருவெள்ளரை அடுத்தது திருப்பைஞ்ஞீலி ஜோதி திருவானைக்காவல் சொல்லிக் கட்டியது திருவரங்கம்” என்னும் பழமையான வழக்காறு இத்தலத்தின் பெருமையை நன்கு உணர்த்துகிறது.திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம்.குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.அதனால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. எமபயம் நீங்க பிரத்தியேகமாக “எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை செய்தால் எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை”.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : அருள்மிகு நீலிவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பைஞ்ஞீலி – மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க