• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

April 20, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி,அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால்,மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.இதனால் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.ஆளும் அதிமுக கட்சி சார்பில் உண்ணாவிர போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி,அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என ஓபிஎஸ்,ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி,அதிமுக சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.வரும் 25 ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பொது கூட்டம் நடைபெறும் என்றும் 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க