• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

April 17, 2018 tamilsamayam.com

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், தாயகம் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. இதில் அசத்திய இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலங்கம் என பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.

இதையடுத்து இந்திய வீரர்கள் தற்போது தாயகம் திரும்பிவருகின்றனர். சுஷில் குமார், மேரி கோம், மனிகா மத்ரா, சுமித் மாலிக் ஆகியோர் அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
இந்தியா வந்த அவர்களுக்கு,ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறுகையில்,”காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டேன் என நம்புகிறேன்.இந்தியர்களின் ஆசீர்வாதங்கள் தான் என்னை இந்த அளவுக்கு செயல்படவைத்தது”. என்றார்.

மேலும் படிக்க