• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போட்டியின் போது முதுகுவலி படாதபாடு படுத்தியது – தோனி

April 16, 2018 தண்டோரா குழு

பஞ்சாபிற்கு எதிரான போட்டியின் போது முதுகுவலி படாதபாடு படுத்தியது என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று மோதியது. இதில் கிறிஸ் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தன. பின்னர் விளையாடி சென்னை அணி போராடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் நடுவே தோனிக்கு முதுகு வலி ஏற்பட்டது. இருந்தும் ஐந்து சிக்சர், ஆறு பவுண்டரி என தோனி தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த காயம் குறித்து தோனி கூறுகையில்,

‘முதுகுவலி படாதபாடு படுத்தியது. இருந்தாலும் கடவுள் தான் அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்கு கொடுத்தார். என் கையால் பேட்டிங் செய்யும் போது, முதுகுப்பகுதியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது பயப்படும் அளவு மிகப்பெரிய காயம் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், அதன் ஆளத்தை உணராவிட்டால், பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.’ என்றார்.

மேலும் படிக்க