• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகளவில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்

July 29, 2016 தண்டோரா குழு

உலக புலிகள் தினமான இன்று நாடு முழுவதும் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் புலிகள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,226 எனவும், உலகளவில் உள்ள புலிகளில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும், 17 மாநிலங்களில், 49 வனவிலங்கு காப்பகங்களில் புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனவும், இதனாலேயே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அறிக்கை கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க