• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனேவில் கட்டுமான இடிபாட்டில் சிக்கி 9 பேர் பலி

July 29, 2016 தண்டோரா குழு

புனே நகரில் பலேவடி என்ற பகுதியில் ப்ரைட் எக்ஸ்பிரஸ் என்ற குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 13வது மாடியில் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, அங்குக் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் உடைந்து கீழே வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புனே மாநகராட்சி காவல்துறை துணை ஆய்வாளர் பி.டெலி கூறும்போது, 13வது மாடியில் சிமென்ட் பலகையை நகர்த்தி வேலை செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 14 பேர் வேலை செய்துவந்துள்ளனர்.

மீதமிருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் குறித்து தகவல் திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க