• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடிக் கிருத்திகை, சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் வலம் வந்தார்

July 29, 2016 தண்டோரா குழு

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகச் சிறப்பு பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி மூலக்கடவுளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைர கிரீடம், முத்துக்கல் மரகதமாலை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மேலும் உற்சவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.

பலர் மொட்டை அடித்துக் கொண்டு சரவணப்பொய்கை திருக்குளத்தில் நீராடி படிகள் மற்றும் மலைப்பாதை வழியாகக் காவடிகளுடன் மலைக் கோயில் சென்றடைந்து முருகனின் அருள் பாடல்கள் பாடியவாறு பலமணி நேரம் பொது வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு காவடிகள் செலுத்தினர்.

ஆடிக்கிருத்திகை விழா தொடர்ந்து மாலை சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் விழா நடத்தப்பட்டது. அதில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மும்முறை வலம் வந்து அருள் பாலித்தார்.

மேலும் படிக்க