• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநில இறகுப் பந்து போட்டியில் வென்றவர்களுக்கு ரூ.18லட்சம் பரிசு

July 29, 2016 தண்டோரா குழு

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்த மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்தது.

இந்தப் போட்டியில், ஆண்கள் அணி தரப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தையும், சென்னை மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. பெண்கள் அணி தரப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம் 2-ம் இடத்தையும், கோவை மாவட்டம் 3-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசளிக்கும் விழா 28.07.2016 மாலை நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் என மொத்தம் ரூ.18லட்சம் மதிப்பிலான பரிசுகளுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார் பாராட்டினார்.

மேலும் படிக்க