• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும் – சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி

April 9, 2018 tamilsamayam.com

சென்னை : ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படாது என சென்னை அணி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன. அதே சமயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இதனிடையே சென்னையில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டியால் போராட்டம் நீர்த்துப் போகும் என கூறி போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என கருத்து எழுந்து வருகின்றன.

போட்டி இடமாற்றம்:

இதனால் சென்னையில் நாளை நடைப்பெற உள்ள சென்னை – கொல்கல்த்தா போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “போட்டியை இடமாற்றம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி இடமாற்றம் செய்யும் எண்ணமும் இல்லை. வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற செய்து வதந்தி அதை நம்ப வேண்டாம்.

போட்டியை உரிய பாதுகாப்புடன் நடத்த சென்னை காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க