• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூணு தடவை மிஸ் பண்ணிட்டேன் இந்த தடவ விட மாட்டேன்: கோலி!

April 5, 2018 tamilsamyam.com

இந்த ஆண்டு எப்படியும் ஐபிஎல்., கோப்பையை கைப்பற்றுவதே தனது இலக்கு என பெங்களூரு அணி கேப்டன் கோலி 120 சதவீதம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் கேப்டனாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார்.

இந்நிலையில் இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல்., தொடர்களில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி, மூன்று முறை ஃபைனலுக்கு சென்ற போதும் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் இம்முறை கோப்பை வெல்வதில் உறுதியாக இருப்பதாக பெங்களூரு கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க