• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

March 28, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மக்கள் போராட்டத்தை ஊடகங்கள் வெளியிட மறுப்பதாக கூறி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(மார்ச் 28)போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலையில் உள்ள தனியார் நாளிதழ் அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.மேலும் சில ஊடகங்கள் போராட்டத்தை மூடி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க