• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தற்கொலை செய்து கொள்ளவும் தயார் – நவநீதகிருஷ்ணன்

March 28, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயார் என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. எனினும், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இது தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டம் எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

இதற்கிடையில் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த நவநீதி கிருஷ்ணன்,   காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவசாயிகள் தண்ணீர் இன்றி தவிப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் நிறைய சொல்லும் பாஜகவினர் அதிகாரப்பூர்வ எதுவும் செய்வதில்லை. சட்டத்தையும் மக்களையும் மதிக்காத ஆட்சி நடந்து வருகிறது என மத்திய அரசு மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க