• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு

March 24, 2018 தண்டோரா குழு

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்துள்ளது.

புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இந்நிலையில் இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த (மார்ச் 22)ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சாமிநாதன்,சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்  உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மேலும் படிக்க