• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு

March 24, 2018 தண்டோரா குழு

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்துள்ளது.

புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இந்நிலையில் இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த (மார்ச் 22)ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சாமிநாதன்,சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்  உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மேலும் படிக்க