மதுரையில் போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கோவை காந்தி பார்க் முன்பு இன்று(மார்ச் 21)இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் தமிழகத்தில் சட்ட விரோத ஜெபக்கூடங்கள் நடைபெறுவதை தடை செய்யக்கோரியும் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பார்க் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின்போது இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்,போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.மேலும்,அனுமதியின்றி நடைபெறும் ஜெபக்கூடங்களை உடனடியாக தடை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை முழங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு