• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பா.ஜ.க.வுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லை முதல்வர் எடப்பாடி அதிரடி

March 21, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க.வுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பது  தொடர்பாக  தி.மு.க எம் எல்.ஏ  கு.பிச்சாண்டி  கேள்வி எழுப்பினார். அப்போது அவருக்கு பதில் அளித்து பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவிரியில் நீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பாரதிய ஜனதாவுடன் கூட்டணியுமில்லை, ஆதரவும் இல்லை என கூறினார்.

அப்போது காவிரி விவகாரத்தில் உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என ஸ்டாலின் கூறினார்.இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது? ஆந்திர பிரச்சினைக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

காவிரிக்காக மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்கவில்லை. நமக்காக எந்த மாநிலமும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.காவிரிக்காக நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்  என முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் படிக்க