• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தற்கொலை முயற்சி

March 21, 2018 தண்டோரா குழு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடை அகற்ற மறுக்கும் காவல்துறை துறையை கண்டித்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிழக்கு ஈ1 காவல் நிலையம் எதிரே டாஸ்மாக் கடை செயல்படுகிறது.இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அச்சப்படும் நிலை உள்ளதால் உடனே டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் மணி என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

இந்நிலையில் தனது மீது பொய் புகார் பதிவு செய்து குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் முயற்சிபாதாக கூறி இன்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் பதாகைகள் கழுத்தில் தொங்க விட்டப்படி கோஷம் போட்ட படி தர்ணா போராட்டத்தில் அமர்ந்தார்.இதனையடுத்து காவலர்கள் மணியை எழுப்ப வலியுறித்திய போது மறைத்து வைத்திருந்த சானி பவுடரை எடுத்து குடித்து விட்டார்.உடனே அருகிலிருந்த காவலர்கள் சானிபவுடரை தட்டிவிட்டு அவரை கைது செய்து,சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க