March 19, 2018
கோவையில் வாலாங்குளம் குளத்தை சுத்தப்படுத்தும் போது, அங்கு குவியலாக கிடந்த மது பாட்டில்களை காண்பிக்கும் வகையில் அதனை அடுக்கி வைத்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவையை அடுத்த வாலாங்குளம் பகுதியில் தன்னார்வ ஆர்வலர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது குளத்தில் குடிமகன்கள் குடித்து வைத்த மது பாட்டில்கள் மட்டுமே குவியல் குவியலாக அவர்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்கு கிடைத்த மது பாட்டிகளை வரிசையாக அரை கிலோ மீட்டர் தூரம் வரை அடுக்கி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனை தொடர்ந்து குளங்களில் இதுபோன்ற கழிவுகள் போடப்படுவதால்,குளங்கள் மாசுபடுவதாகவும் எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.