• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரம்: மார்ச் 25ந்தேதி தினகரன் உண்ணாவிரத போராட்டம்

March 17, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் மேலாண் வாரியத்தை அமைக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பின் தினகரன் அறிவித்துள்ள முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க