• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்

March 17, 2018 tamilsamayam.com

சென்னை : சென்னை அணியிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் விலகியிருப்பது வேதனை அளிப்பதாக பவுலிங் கோச் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் சென்னை அணியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். அவருக்கு முலங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் 11வது சீசனில் சென்னை அணிக்காக விளையாட முடியாது என தெரிவித்துள்ளார்.

பாலாஜி வருத்தம் :
மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான மிச்செல் சாண்ட்னர் காயம் காரணமாக சென்னை அணிக்காக விளையாட முடியாது என கூறியுள்ளது வருத்தமளிக்கின்றது.

தோனிக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீச வேண்டும் என ஆசைப்பட்டவர் சாண்ட்னர். ஆனால் போட்டி தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு முலங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு சாண்ட்னர் போன்ற மிகச்சிறந்த ஆல்ரவுண்டரின் இழப்பு மிகப்பெரியது என சென்னை அணிக்கான பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் படிக்க