• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜியோ செல்போன் நெட்வொர்க் துவங்க இவர் தான் யோசனை கொடுத்தார் – முகேஷ் அம்பானி

March 16, 2018 தண்டோரா குழு

முகேஷ் அம்பானியின் ஜியோ4ஜி  செல்போன் நெட்வொர்க் வருகைக்கு பின் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இணைய சேவை இலவச வாய்ஸ் கால் என பல்வேறு சலுகைகள் அளித்தால் பலரும் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறினார். இதனால் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்தன.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற விருதுநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அம்பானி, தனது மகள் இஷா யேல் பல்கலைக் கழக பாடங்களை முடிப்பதற்காக இணையசேவை மெதுவாக இருப்பதாக வருத்தப்பட்டதாகவும், அப்போது தனது மகனான ஆகாஷ் அம்பானி புதிய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதாக கூறியதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செல்போன் நிறுவனங்களால் செயற்கையாக இணைய சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை உணர்ந்ததால் அதற்கு மாற்றாக ஜியோ சேவையை கட்டமைத்ததாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும் படிக்க