• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோன்

March 16, 2018 தண்டோரா குழு

ஏர்செல், ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடோஃபோனிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்கிற்கு மாறி கொள்ளும்படி அறிவுரை வழங்கியது.அதன்படி அதிகப்படியோனோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடோ போனைத் தான்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக ஏர்டெல் சேவையும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் சேவையும் நேற்று சரிவர கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.இதனிடையே புகாருக்கு விளக்கம் கொடுத்த ஏர்டெல், “சிரமத்திற்கு வருந்துகிறோம். சில இடங்களில் பிரச்னை இருந்தது உண்மைதான். தற்போது மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைலை சுவிட் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்யுங்கள் ” என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஏர்செல், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது வோடோஃபோன் வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனெனில் வோடோஃபோனிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று பல இடங்களில் வோடோஃபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. நெட்வொர்க் சரியாமல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள வோடோஃபோன் இந்தியா, “இதுஒரு தாற்காலிகமான பிரச்னை. நாங்கள் அதனை சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்துவிடுவோம். பிரச்னை சரியான பின்பு உங்களால் சிரமமின்றி மற்றவர்களுக்கு தொடர்பு கெள்ள முடியும்” என விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க