• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு

March 15, 2018 தண்டோரா குழு

வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்காக பல்வேறு அரசுத் துறையினர் வேதா இல்லத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  2018–19ம் ஆண்டிற்காக தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதைபோல், ஆளுநர் உரையில் ஏற்கெனவே அறிவித்தபடி மெரீனா கடற்கரையில் 80 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க