• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பெரியதடாகம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

March 15, 2018 தண்டோரா குழு

கோவை பெரியதடாகம் அருகே 10 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வேட்டைதடுப்பு காவலர்கள் மீட்டு இன்று(மார்ச் 15)அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவை பெரியதடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள 10 அடி உயர தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க இன்று அதிகாலை இரு குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது.அதில்  பிறந்து 1 மாதமே மாத யானை குட்டி தீடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.குட்டியானையை மீட்க முடியாமல் தாய் யானை பிளிறியது. சத்தம் கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மற்ற யானைகள் வனத்துறையினரை குட்டியானையின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்தன. எனினும் மற்ற யானைகளை விரட்டிவிட்டு ஜே.சி.பி இயந்திர உதவியுடன் தண்ணீர் தொட்டியில் இருந்து யானை குட்டியை மீட்ட  வனத்துறையினர் யானைகுட்டியை அதன் கூட்டத்துடன் சேர்த்து வனத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க