• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரித் தொகை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

March 13, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வரித்தொகை நிலுவை வைத்ததாக 9 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சியினர் துண்டித்து உள்ளனர். இந்த நடவடிக்கை தொடறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்துவரி குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரித் தொகைகளின் வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வழக்கமாக உள்ள 29 வரி வசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் சிறப்பு மையங்கள் அமைத்து வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.வரித்தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் பல்வேறு மண்டலப் பகுதிகளில் இருந்து மொத்தம் 9 குடிநீர் இணைப்புகள் ஒரே நாளில் துண்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த வித வரியும் செலுத்ததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வரி செலுத்தாத 35 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க