• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல்

March 9, 2018 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் அழித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார்கைது செய்தனர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. பின்னர், அதனை  மேலும் 3 நாட்களுக்கு நீடித்தது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே 9 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு சி.பி.ஐ காவலை நீட்டித்தது பாட்டியாலா நீதிமன்றம்.

மேலும் படிக்க