• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்!!

March 9, 2018 tamilsamayam.com

பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய வில்வித்தை கோப்பை பேங்காக்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

கலப்பு பிரிவு இறுதி போட்டியில் மலேசியாவின் சக்காரியா நாதிராவை எதிர்கொண்ட கிரார் 139-136 என்ற புள்ளிக்கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல், தனிநபர் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற டைமரி, ரஷ்யாவின் எர்டினினிவா நட்டாலியாவை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

இவர்களைத் தவிர, மது வித்வான் மற்றும் கவுரவ் டிராம்பக் லாம்பே ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தனர்.

மேலும் படிக்க