• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்!!

March 9, 2018 tamilsamayam.com

பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய வில்வித்தை கோப்பை பேங்காக்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

கலப்பு பிரிவு இறுதி போட்டியில் மலேசியாவின் சக்காரியா நாதிராவை எதிர்கொண்ட கிரார் 139-136 என்ற புள்ளிக்கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல், தனிநபர் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற டைமரி, ரஷ்யாவின் எர்டினினிவா நட்டாலியாவை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

இவர்களைத் தவிர, மது வித்வான் மற்றும் கவுரவ் டிராம்பக் லாம்பே ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தனர்.

மேலும் படிக்க