• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக இருந்த வெங்கடேஷ் பிரசாத் திடீர் ராஜினாமா

March 4, 2018 tamilsamayam.com

ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக கடந்த 30 மாதங்களாக செயல்பட்டு வந்த வெங்கடேஷ் பிரசாத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் ஜூனியர் உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனைப் படைத்தது. முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இந்த ஜூனியர் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்துப் பிசிசிஐ தலைவர் சி கே கன்னா கூறுகையில், “வெங்கடேஷ் பிரசாத் ராஜினாமா குறித்த காரணத்தை அவரின் கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவர் வேறு ஏதேனும் பொறுப்பை ஏற்பதற்காக ராஜினாமா செய்திருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

ஜூனியர் அணி தேர்வுக்குழுவில் உள்ள 6 உறுப்பினர்களில் வெங்கடேஷ் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க