• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற விபத்தில் 4 பேர் பலி

July 23, 2016 வெங்கி சதீஷ்

திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையில் உள்ள வெரையூர் என்ற இடத்தில் இன்று காலை பழுதாகி நின்ற ஒரு தனியார் சுற்றுலா பேருந்தை அதன் ஓட்டுனர் பழுது நீக்கும் வேளையில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேருந்தின் பின்புறம் இருந்து வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது வேகமாக மோதியது.

இதில் பேருந்தில் இருந்த நான்குபேர் உயிரிழந்தனர். மேலும் 25பேர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தில் வந்த அனைவரும் தருமபுரி மாவட்டம் பாலகோடு பகுதியில் உள்ள புக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், திருவண்ணாமலைக்குச் சுற்றுலா வந்தபோது, பேருந்து பழுதாகி நின்றதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்து லாரி ஓட்டுனரை தேடிவருகின்றனர். ஒரே ஊரைச்சேர்ந்த நான்குபேர் சுற்றுலா சென்றபோது உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க