February 28, 2018
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் (89) உடல்நலக் குறைவால் இன்று(பிப் 28)காலமானார்.
கடந்த 1974-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவிவகித்துள்ளார்.1988 டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1988-ல் டிசம்பர் முதல் 1994 மார்ச் வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்த ரத்தினவேல் பாண்டியன், 1994ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.