• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் காவல்துறை அனுமதி

February 27, 2018 தண்டோரா குழு

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி கடந்த 25ம் தேதி துபாயில் குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டு வரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில்,நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்வதற்கான அனுமதி கடிதத்தை துபாய் காவல்துறை வழங்கியுள்ளதாகவும், மேலும்,இன்று இரவுக்குள்  ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவுக்குள் இந்தியா அனுப்பப்படும் என்று இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க