• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சண்டிகர் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் மர்ம மரணம்

February 26, 2018 தண்டோரா குழு

சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் மர்ம மரணடைந்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிருஷ்ண பிரசாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து  கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகர் விரைந்துள்ளனர்.

கிருஷ்ண பிரசாத்தின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மர்மமாக உயிரிழப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க