• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்

February 26, 2018 தண்டோரா குழு

நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது   மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், குளியலறையில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.  நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது மரணம் விபத்து என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றும் குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் உடற்கூறாய்வு சோதனையில் தெரிய வந்துள்ளதாக துபாய் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

 

மேலும் படிக்க