• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் – கார்த்திக் எம்.எல்.ஏ

February 26, 2018 தண்டோரா குழு

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் என கோவை எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,    

சிறுவாணி அணைகட்டு பகுதியில் இருந்து சராசரியாக 101 mlt குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணைகட்டு பகுதியில் கேரளா அரசு அதிகப்படியான குடிநீரை தற்போது திறந்து விட்டு உள்ளனர். ஏற்கெனவே பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகளை கேரள அரசு அணைகட்டி உள்ளதால் , குடிநீர் விநியோகம் குறைந்து உள்ளது. தமிழக அரசு , கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும். சிறுவாணி அணைகட்டு பகுதியில் , பழங்குடியின மக்களுக்காகவும், வன விலங்குகளுக்காகவும் திறந்து விடக்கூடிய  தண்ணீர் அளவு அதிகப்படியான அளவு திறந்து விடப்படுகிறதா அல்லது சராசரி அளவு திறக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோவையில் உள்ள அனைத்து கட்சியினரை சேர்ந்தவர்கள் சிறுவாணி அணைக்கட்டு பகுதிக்கு சென்று இது தொடர்பாக பார்வையிட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க