• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காளப்பட்டியில் பஞ்சு குடோனில் தீ விபத்து

February 22, 2018 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள பழைய பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு தீயில் எரிந்தது.

கோவை காளபட்டி பகுதியில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா  பஞ்சு குடோனில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கபட்டிருந்த பஞ்சுகளில் தீ பரவியதை அடுத்து அப்பகுதி முற்றிலும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டது.இதனையடுத்து பீளமேடு,கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் கூறுகையில்,1500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க