• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காளப்பட்டியில் பஞ்சு குடோனில் தீ விபத்து

February 22, 2018 தண்டோரா குழு

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள பழைய பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு தீயில் எரிந்தது.

கோவை காளபட்டி பகுதியில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா  பஞ்சு குடோனில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கபட்டிருந்த பஞ்சுகளில் தீ பரவியதை அடுத்து அப்பகுதி முற்றிலும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டது.இதனையடுத்து பீளமேடு,கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் கூறுகையில்,1500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க