• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சத்துணவு பணியாளர்கள் சாலை மறியல்

February 15, 2018 தண்டோரா குழு

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சத்துணவு ஊழியர்கள் இரயில் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது,  காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக,சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவல்துறையினர் சத்துணவு ஊழியர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ஒசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் உயிறற்றவர் போல படுத்து ஒப்பாரி வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட 250 சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க