February 15, 2018
தண்டோரா குழு
விரைவு ரயில்களில் மார்ச் 1-ம் தேதி முதல் முன்பதிவு பயணிகள் பட்டியல் ஒட்டப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவையும் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல்முறைக்கு மாறும் முயற்சியிலும் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் ஏ1,ஏ மற்றும் பி தரமுள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு பயணிகளின் பட்டியல் ஒட்டப்படாது. அதற்கு பதிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களிலும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.